Pages

Saturday, 18 April 2026

கற்றோர் அவையில் கல்லாதவனுக்குத் துன்பமே!

 

கற்றோர் அவையில் கல்லாதவனுக்குத் துன்பமே!

--- அன்பு ஜெயா

(பா வகை:  காவடிச் சிந்து)

 

கல்வியின்றி நல்லறிவு மில்லை – குதிரைக்கும்

கல்லானைச் சுமத்தல் தொல்லை – என்றும்

       கல்வியில்லான் சொல்லின்னல்

       கல்வியின்றேல் வாழ்விலின்னல்

கல்வியே - உயர்த்தும் – உலகையே!            (1)

 

செல்வம் இல்லான் சொல்லும் – துன்பமே

செல்வம் உள்ளான்சொல் வெல்லும் – அவையில்

       கல்லான்சொல் துன்பமே

       கல்விதான் வெல்லுமே

கற்போம் – வாழ்வில் – உயர்வோம்!            (2)

--------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: