Pages

Saturday, 18 April 2026

கற்றோர் அவையில் கல்லாதவனுக்குத் துன்பமே!

 

கற்றோர் அவையில் கல்லாதவனுக்குத் துன்பமே!

--- அன்பு ஜெயா

(பா வகை:  காவடிச் சிந்து)

 

கல்வியின்றி நல்லறிவு மில்லை – குதிரைக்கும்

கல்லானைச் சுமத்தல் தொல்லை – என்றும்

       கல்வியில்லான் சொல்லின்னல்

       கல்வியின்றேல் வாழ்விலின்னல்

கல்வியே - உயர்த்தும் – உலகையே!            (1)

 

செல்வம் இல்லான் சொல்லும் – துன்பமே

செல்வம் உள்ளான்சொல் வெல்லும் – அவையில்

       கல்லான்சொல் துன்பமே

       கல்விதான் வெல்லுமே

கற்போம் – வாழ்வில் – உயர்வோம்!            (2)

--------------------------

வான் சிறப்பு

 

வான் சிறப்பு

--- அன்பு ஜெயா

பா வகை: இன்னிசைக் கட்டளை வெண்பா

 

வான்பார்த்தே வாழ்வோர்தம் வாழ்வினிலே எப்போதும்

தேன்போலப் பாய்ந்திடவே தென்மேற்கில் தோன்றியே

வான்பிளந்துப் பெய்துமே வாழ்விக்கும் தேன்மழை

நான்வணங்கி நிற்பேன் நனைந்து.

 

வான்பொய்த்தால் மக்கள்தம் வாழ்வும்தான் பொய்த்திடுமே

நான்வணங்கும் நல்லிறை நம்மையும் காத்திடும்

வான்திறக்கும் நன்றாக வாழ்வும் சிறக்குமே

வான்மீதில் நம்பிக்கை வை.

 

உலகத்தை வாழ்விக்கும் உன்னையென்னை எல்லாம்

பலகாலம் காத்தும் பயன்தருமே வானம்

இனிதான வாழ்வில் இறையருளை நம்பி

இனிமேலும் வாழ்தல் இனிது.

--------------------------------

அன்னையின் பாலமுது

 

அன்னையின் பாலமுது 

--– அன்பு ஜெயா

 

பா வகை: ஆசிரியத் துறை

(ஈற்றயலடிக் குறைந்து நான்கடியாய் வந்த ஆசிரியத் துறை)

 

இன்றைய உலகில் எம்மை ஈன்ற

அன்னையும் அன்புடன் அளித்தப் பால்தான்

என்றும் வாழ்வினில் எம்மையும்

நன்றாய்க் காத்து நலமுடன் வைக்குதே!

 

வள்ளுவர் அளித்த வான்புகழ் முப்பால்

தெள்ளியக் கருத்தைத் தேனாய்த் தருமே!

அள்ளி யணைத்தே அன்னையும்

வெள்ளமாய்த் தந்தபால் வீறுமே அளிக்குமே!

 

உன்னைக் காக்கவே உலகில் வாழ்பவள்

அன்னையே என்பதில் ஐயமும் உண்டோ

அன்னையின் பாலுமே அமுதமே

அன்னை அளித்தபால் ஆயுளை நீட்டுமே!

-------------------------