Pages

Monday, 20 April 2026

நல்லவரில்லா நாட்டில் துன்பமே!

 

நல்லவரில்லா நாட்டில் துன்பமே!

– அன்பு ஜெயா

பா வகை:  நொண்டிச் சிந்து – இருமுச்சீரிரட்டை

 

ஒழுக்கமிலான் உறவென்றே – ஒன்றிணைந்தால்

      ஒருபோதும் இன்பம்தான் இருக்காதே;

வழுவின்றி நன்னூல்கள் – கல்லாதார்

      வாழ்வு துன்பத்தில் ஆழ்ந்திடுமே;

இழுக்குதரும் தொழில்செய்வோர் – நட்பினில்

      இணைந்தால் துன்பமுனை அணைத்திடுமே;

வழுவில்லா நல்லோரை – விரும்பாதார்

      வாழுமிடம் சேராதே

           வாழ்ந்திடவும் எண்ணாதே!   (1)

 

ஒழுக்கமிலா உறவினரை – உதறிவிடின்

      ஒப்பற்ற நன்மையுண்டே எப்போதும்;

வழுவில்லா நூல்களையே – கற்றிடுவாய்

      வாழ்வினில் நன்மை சூழ்ந்திடுமே;

இழுக்கில்லா தொழில்போற்று – நாளும்

      இன்பமே வாழ்விலேது துன்பமே;

வழுவில்லா நல்லோர் – ஊரில்

      வாழுமிடம் சேர்ந்துவிடு

           வளமதுவும் பெற்றுவிடு!           (2)

-------------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: