மரபுப் பாக்கள் - தொகுதி 1
நிலைமண்டில ஆசிரியப்பா
“கல்லால்
நிழலில் கனிவோ டமர்ந்து
நல்லார்
நால்வர்க் குஞான போதச்
சொல்லாம் அமுதைச் சிறப்போ டளித்தாய்
எல்லா உயிரும் ஏற்றம் பெறவே!”
--------------------
01. அன்பே வெல்லும் கருவி.
நிலைமண்டில ஆசிரியப்பா.
பார்க்கும்
இடமெலாம் பாழும் போரெனில்
ஆர்த்தெழும்
இளையோர் ஆருயிர்ப் போகுமே!
பாரெலாம்
சிறந்திடப் பற்றுவோம் அமைதியைப்
போரெனும்
சொல்லே போயழி யட்டுமே!
நிலைமண்டில ஆசிரியப்பா.
உன்னைநீ
யறிவாய், உன்னுள் புதைந்தே
உன்னைக்
காக்கும் உன்திறன் நீயுணர்;
நன்றாய்
வெற்றியை நாடொறும் தந்திடும்,
நன்றே
போற்றுவர் நண்பருந் தானே!
03. இல்லற வாழ்வைச் சுவை.
நிலைமண்டில ஆசிரியப்பா.
இல்லறம்
என்பது இன்பம் தந்திடும்
நல்லறம்
என்பதோ நம்மை உயர்த்திடும்
இல்லறம்
பேணுவோம் இனிது வாழவே,
நல்லறம்
பேணிட நற்கதி தானே!
-----------------------------
தாங்கள் வெகு நாட்களுக்கு பிறகு எழுதியுள்ளீர்கள் போலும். வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி
ReplyDeleteஅருமை. பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி, தமிழா விழி.
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா
Deleteஅருமையான கருத்துக்கள், மேலும் எழுதுங்கள்
ReplyDeleteமிக்க நன்றி
Delete