Pages

Wednesday 16 October 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள்

  மரபுப் பாக்கள் -  தொகுதி 5


13) எஃகாய் ஈரக்குலை கொள்.         

பா வகை: வெளி மண்டிலம்.      

காலமுந் தானாய்க் கனிவதே இல்லை – காத்திராதே!

காலமு மெவர்க்கும் களமமைப் பதில்லை – காத்திராதே!

பாலமு மமைத்துநீ பார்தனில் போரிடு – காத்திராதே!

ஞாலமு முனக்கினி ஞாயிறா யொளிர்ந்திடும் – காத்திராதே!

(ஈரக்குலை - இதயம்)

---------------------------------


14) கண்டதும் அன்பு (காதல்) பொய்.

பா வகை: வெளி மண்டிலம்.

கண்ணுக் கழகாய்க் காண்பதும் பொய்தான் – உணர்வாயே!

கண்வுட னன்புமோ கனவொன் றிலேதான் – உணர்வாயே!

மண்ணுல கினிலே மாறுமே காட்சிகள் – உணர்வாயே!

திண்ணமாய் நீயுமே தெளிந்திட வேண்டும் – உணர்வாயே!

------------------------------------


15) 'போல நளினம் கொள்.

 பா வகை: வெளி மண்டிலம்.

 உன்கை விரல்களே ஒன்றுபோல் இல்லையே! – உணர்வாயே!

உன்னைச் சூழ்ந்தவர் ஒன்றுபோல் இருப்பரோ? – உணர்வாயே!

என்றுமே அனைவரின் எண்ணமும் வேறுதான் – உணர்வாயே!

அன்னவர் குணப்படி அணைவதே நலம்தரும் – உணர்வாயே!


----------------------------------------- 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: