Pages

Tuesday 15 October 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள்

 மரபுப் பாக்கள் -  தொகுதி 4


10) ஒப்புவமை யோடு வாழ்.

பா வகை:  அடிமறி மண்டில ஆசிரியப்பா.

 

அறம்தான் பெருகிட அனைவரும் உயர்வரே!

திறம்தான் பெருகிடத் திட்டமும் பெருகுமே!

தன்னை நம்புவோர் தரைதனி லாள்வரே!

உன்னை உயர்த்திடே உலகையும் உயர்த்தவே!

கால முனக்காய்க் காத்திருப் பதில்லையே!

பாலமு மைத்திடு பாரினை யுயர்த்தவே!


11) ஓதலின் உண்மை உணர்.

 

பா வகை: அடிமறி மண்டில ஆசிரியப்பா.

 

மெய்ப்பொருள் காண்பதே மெய்யறி வாகுமே!

செய்யும் வினைகளும் செம்மையாய்ச் செய்கவே!

வள்ளுவ ருரைத்தார் வழியினைக் காட்டியே!

தெள்ளத் தெளிவாய்த் தெரிந்துநாம் நடப்பமே!

உன்னறி வுனக்குமே உறுதியாய்க் கூறுமே!

உன்னுள முரைப்பதே உண்மையு மாகுமே!


12) ஒளவையாய்ப் பெண் காண்.

 

பா வகை: அடிமறி மண்டில ஆசிரியப்பா.

 

பேதையாய்த் தவழ்ந்தநீ பேரிளம் பெண்ணே!

பாதையும் செப்பமாய்ப் பார்த்தளித் தவளே!

குடும்பம் சிறக்கவேக் குன்றென நின்யே!

விடு(ம்)மூச் செல்லாம் விளையும் தளிர்க்கே!

தன்னை வருத்தியும் தளிரைக் காத்தியே!

அன்புடன் உன்னையே அம்மா என்பனே!


--------------------------------------------------------------------


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: