Pages

Friday, 22 May 2026

குற்றமற்றவரின் கடுஞ்சொல்லும் இனிதே!

 

குற்றமற்றவரின் கடுஞ்சொல்லும் இனிதே!                                   

--- அன்பு ஜெயா

பா வகை: ஒப்பாரிப் பாட்டு என்ற சிந்து பாடல்

 

(ஒப்பாரி)

குற்றமிலார் சொல்நன்றே

வற்றாதோர் அன்புண்டே;

கடுஞ்சொல்லும் மாற்றிடுமே

விடுபடுவாய் நல்வழிக்கே;

மற்றவரின் இன்சொல்லோ

சற்றுமுனைக் காத்திடாதே;

குற்றமிலார் பின்சென்றே

குற்றமின்றி வாழ்வாயே;

பற்றுமின்பம் வாழ்வினிலே!

 

(ஒப்பாரி வேற்றினம்)

குற்றமற்றோர் கடுஞ்சொல்லும் கூறுவருன்

குற்றமதும் கலைந்திடவே கூறுகின்றார்;

அவர்கூறும் கடுஞ்சொல்லில் அன்புண்டே

தவறுநீக்கி அவருரையால் தழைத்திடுவீர்;

மற்றவரின் கடுஞ்சொல்லோ மனங்கலக்கும்

உற்றதோர் துணைத்தேட உனைவிரட்டும்;

நாயனாரும் எறிந்தகல்லை நயந்தேற்றார்

நயமான மாறனம்பை நாடலையே;

மாறாத சாக்கியனின் மாண்பதுவோ

மாறனம்பு மென்மைதான் மனமிலையே;

வற்றாத அன்புடனே வாழ்ந்தாலே

குற்றமற்றோர் உயர்வாரே குணத்தாலே!

------------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: