வஞ்சக ஆட்டம்
துன்பமே!
--- அன்பு
ஜெயா
(பா
வகை: நாலடியால் அமைந்த இருமுச் சீரிரட்டை
வியனிலைச் சிந்து.)
நண்பனின் துன்பத்தைக் – கண்டுமே
நல்லுதவி புரியாதல் துன்பமே;
கண்முன்
பகைவர்தம் – செருக்கினைக்
காண்பதும் வாழ்வினில் துன்பமே;
கண்போன்ற
உறவுகள் – இன்றியே
காலம் கழித்தலும் துன்பமே;
பண்பினை
இழந்துமே – பணயஆட்டம்
பழகுவோன் வாழ்விலும் துன்பமே! (1)
நண்பர்கள்
துயர்தனில் – தயங்காது
நாளும் உதவிடல் வேண்டும்;
கண்களால்
பகைவரின் – செருக்கினைக்
காணாது விலகிடல் வேண்டும்;
கண்ணான
உறவுகள் – நடுவிலே
காலமும் வாழ்ந்திடல் வேண்டும்;
பண்பினைக்
காத்து வாழ்வில் – என்றுமே
பணயஆட்டம் தவிர்த்திடல் வேண்டும்! (2)
-----------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: